“அசரீரி”

அசரீரி (ஒரு தமிழ் அல்லது சமஸ்கிருத வார்த்தை). அது அறியப்படாத இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் தெய்வீக குரல் அல்லது ஓர் அனுமாஷ்ய சக்தி. இதை எல்லா மனிதர்களும் தம்முள் கேட்கலாம். அதாவது உயிர்கள் அனைத்திற்கும் உடம்பு உண்டு. உடம்பை சமஸ்கிருதத்தில் சரீரம் என்பர். சரீரத்தைப் பெற்றிருப்பதால் உயிர்களுக்கு சரீரி என்று பெயர்.

பகவத் கீதை: அத்தியாயம் 10: ஸ்லோகம்: 33ல் எழுத்துக்களுக்குள் நான் அகரம்(அ) என்னும் கூட்டு சப்தம் என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியுள்ளார். அச்- சப்தம் நிலைபெற பஞ்சபூத சக்திகளில் முதன்மையான ஆகாச சக்தி வேண்டும். ஆகாசத்தில் தான் இச்-சப்தம் ஒடுங்கி கேட்க்கும். அது போன்று ஒவ்வொரு  மனித உயிர்களின் சரீரத்தின் உள்ளும் சித்-ஆகாசம் உள்ளது. இஃதிலும் அகார சப்தமாக ஸ்ரீகிருஷ்ணனின் தெய்வீக குரல் ஒடுங்கி சதா ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. காது உள்ளவர்கள் அதை தம் intuition என்று சொல்லப்படும் உள்ளுணர்வாக கேட்கலாம்!

Leave a comment