சாதலும் புதுவது அன்றே;…

கணியன் பூங்குன்றனார் 192-ஆம் புறநானூற்று பாடல்: 

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழமையான பாடல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது…

ஆனால் அந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே பலர் அறிவார்கள்.

முழு பாடலும் வாழ்வின் முழுத் தத்துவத்தை விளக்குகிறது…. அதில் உள்ள  மற்றொரு வரி…

சாதலும் புதுவது அன்றே;…

சாதலும்’ என்பதற்கு இறத்தல்’ அதாவது உடம்பை விட்டு உயிர் பிரிதல் என்று பொருள் ஆகிறது. புதுவது’ என்பதற்கு புதியது’  என்று தமிழ் அகராதியில் பொருள் உள்ளது. அன்றே’  என்பதற்கு அப்போதே’ என்பதே பொருள் எனக் கொண்டால்…

உடம்பை விட்டு உயிர் பிரிந்த அக்கணமே அதாவது அப்போதே, புதியதாக உயிரானது மற்றொரு உடம்பில் புகுவது’ என்பதும் மாறாத ஒன்றாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்னும் பொருளை உள்ளடக்கியதாக, சாதலும் புதுவது அன்றே;… என்னும் வரி பாடல் கணியன் பூங்குன்றனார் அவர்களால் புறநானூற்றில் சொல்லப்பட்டிருக்கலாம்.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment