You are Not a Brahmin “
“பிறந்த போது கோவண மிலங்கு நூல் குடுமியும்
பிறந்துடன் பிறந்ததோ பிறந்து நாற் சடங்கெலா
மறந்த நாலு வேதமும் மனத்துளே யுதித்ததோ
நிலம் பிளந்து வானிடிந்து நின்றதென்ன வல்லீரே”.
சிவவாக்கியர் பாடல்:
பொழிப்புரை:
“நிலம் பிளந்து வானிடிந்து நின்றதென்ன வல்லீரே”
பூமியை பிளந்து ஆகாயத்தை இடித்தும் நிற்பது
‘ஓம்’ என்னும் பிரணவ சப்தமே!
“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” என்பது பைபிள் வசனம்.
அதுவே ஆத்ம சொரூபம், தோன்றியிருக்கும் இம்-மானுடயாக்கைகள் யாவற்றிற்கும் ‘உயிர் வித்தாக’ இருக்கின்றது. நான்கு வேதங்களும் அதன் மூச்சேயாம். அதுவே ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதி!
இஃதிலிருந்து வெளிப்பட்ட ‘மனம்’ என்னும் மாயசக்தியே மற்ற அம்சங்களான ‘பிராணன் மற்றும் பஞ்சபூதங்களை’ கொண்டு
பின் எவ்வாறு மனிதர்களுக்குள் ‘எம்மதம், எம்இறை எம்குலம்’ என்னும் வேறுபாடுகள் எழுகின்றன? அதற்கு ‘மனம்’ தான் காரணமாகின்றது.
“மறந்த நாலு வேதமும் மனத்துளே யுதித்ததோ”
அதாவது தோன்றிய ஒவ்வொரு மானுடவடிவத்திலும் உயிர் வித்தாக இருக்கும் சுத்த சிவஜோதியின் மூச்சே நான்கு வேதங்களாகவும்
அதன் மூலம் ‘மனமானது’ மனிதர்களுக்குள் ‘எம்மதம், எம்இறை, எம்குலம்’ என்னும் வேறுபாடுகளை தோற்றுவித்து, ‘அங்கும் இங்குமாக பிறப்பும் இறப்புமாக’ அலைக்கழித்துக்கொண்டு இருக்கிறது.
முடிவுரை:
“எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல் (221)
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

.jpeg)
