You Are That! – “no partition, no number, no individuals”

“In things of magic sound, there is no partition, no number, no individuals. How sweet is the oneness-unearth the treasure of Unity.”
:Rumi Quotes

Meaning of “there is no partition”:

Yes, There is no soul and no body, only the soul.

”ஜீவன் தோன்றி அசையும் போது ‘உயிர் உடம்பு’ என்னும் மாறுபாடு கொண்டது போலவும், அதுவே அசையாத போது ‘உயிரற்ற உடம்பாக’ கருதப்படும். அதாவது ‘அசைகிறது அசையாதது’ என்னும் இவ்விரண்டின் தன்மைகளுக்கு இடைப்பட்ட உள்ள கால அளவே ‘பிரிவினை’ என்னும் சொல்லாகின்றது.
வாஸ்த்துவத்தில் உள்ளது ‘உயிர்’ ஒன்றேயாம். ஜீவனாக தோன்றும் போது அது அசைவுள்ளதாகவும், மறையும்போது அது அசைவற்றதாகவும், அதாவது பிரிவினை கொண்டதாக அறியாமையில் அறியப்படுகின்றது. தன்னை ‘உயிர் உடம்பு’ என்னும் ‘பிரிவினை’ கொண்ட ஜீவனாக கருதிய அறியாமையிலிருந்து….
‘அறிவுக்கு அறிவாய்’ விளங்கும் குருவருளால் விடுபட்டு, ஆதிமுதலே தன்னையும், அனைத்தையும் ‘உயிராகவே’ கண்டு உணரும்

ஞானிகளுக்கே “there is no partition” என்னும் இச்சொல் உரித்தாகும். அதாவது அங்கு அசைவும் இல்லை அசையாததும் இல்லை, தோற்றமும் இல்லை மறைவும் இல்லை.

திருமூலரின் திருமந்திரம்:
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.

Meaning of “there is no number” :
உயிர் என்பதும் சப்த பிரஹ்மம் என்பதும் ஒன்றேயாம்! அது எது ஒன்றாலும் உருவாக்கப்படவில்லை, அது எது ஒன்றையும் உருவாக்கவும் இல்லை. அதாவது தோன்றித் தோன்றி மறைந்தது கொண்டிருக்கும் சப்த ஜாலமாகிய இவ்வுலக உருவங்கள் யாவுமே உருவமற்ற சப்த பிரஹ்மத்தின் பிரதிபலிப்பேயன்றி, அது எப்போதும் தன்னில் தானாகவே, சுட்டும் தன்மையின்றி, அதாவது கணக்கீடும் எல்லைக்கும் அப்பாற்பட்டதாகவே விளங்கிக் கொண்டிருப்பதால்….it has no number.
“ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:21)
Meaning of “there is no individuals”:
Bible:John 10:35
“And you know that the Scriptures cannot be altered. So if those people who received God’s message were called ‘gods”
உயிராகிய சப்த பிரஹ்மத்தை முறையாக அப்பியாசிப்பவர்கள் யாவருமே சான்றோர்த்துவம் அடையப் பெற்றவர்களே, வேதத்தில் கூறியுள்ள படி…
இத்தகைய சான்றோர்த்துவம் அடையப் பெற்றவர்கள்
‘no partition, no number’ என்னும் தன்மை கொண்டவர்களாகவே விளங்கிக் கொண்டிருப்பதால் தனித்துவம் மறைந்தது போய் ‘no individuals’ என்னும் பொதுத்துவம் ஒன்றே அங்கு வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.
“எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள்
அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி.”
(அகவல்: 100)
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment