“இருள் இடத்து சிக்கெனப் பிடித்தேன்”

திருவாசகம் “பிடித்த பத்து”-4

“சிவபெருமானே! இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;

எங்கு எழுந்தருளுவது, இனியே” ?

இருள்: என்பதற்கு ‘பிறப்பு’ என்று ஒரு பொருள் உள்ளது ‘பிறப்பு’ என்பது தாயின் கருவறையில் இருக்கும்போதே தொடங்கி விடுகின்றது. அவ்வாறு கருவறையில் இருக்கும்போது அவ்விடம் ‘இருள்’ சூழ்ந்த இடமே.

மணிவாசகப் பெருமான் அவ்வாறு தாம் இருள் சூழ்ந்த தாயின் கருவறையில் இருக்கும்போதே “சிவபெருமானே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? என்று கேட்கும் இக்கேள்வியே அவர் சொல்லிய பாட்டின் பொருள் எனக் கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏