“அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே”
(அகவல்:901)
1. வேதத்தின் மகாவாக்கியம் தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि)
2.அஷ்டாவக்ர கீதை:2:2
அதுவே அதுவாய்:
‘அது’ என்பது வேதவாக்கியத்தின் பொருளான ‘அது’ என்னும் அருட்பெருஞ்ஜோதியே!
மெய்,வாய், கண், காது, மூக்கு என்னும் ஐம்புலன்களை கொண்ட இவ்வுடல் ஒளிர்வது ‘அது’ என்னும் அவ்-ஒளியாலே! ஆகவே இவ்வுடலும் ‘அது’ வாக,
(அகவல்:1489)
இவ்வாறு ஒளிர்யூட்டப்பட்ட ‘அது’ என்னும் இச்-ஜோதிர் தேகத்தில்,
“அதுவினுள் அதுவாய்” விளங்கிக்கொண்டிருப்பதும்
‘அது’ என்னும் அருட்பெருஞ்ஜோதியே …
“ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:13)
பொதுவினுள் நடிக்கும்:
இவ்வாறு ஒன்றேயாய் விளங்கிக் கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதி, பற்பல உருவம் கொண்ட எண்ணிலடங்காத ஜீவராசிகளாய், ஒவ்வொன்றுக்கும்
“ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:693)
பூரணப் பொருளே:
‘அது’ அருட்பெருஞ்ஜோதி மாறுபாடு அற்ற பரிபூரண ஒளியாய், தோற்றத்திற்கு அப்பால், சதா ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது.
“தோற்றமா மாயைத் தொடர்பறுத்து அருளின்
ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:833)
சாய்ராம்.


