You Are That! – “Extoller”

“விமர்சனம்”

“யாராவது உங்களை விமர்சிக்கும்போது அல்லது உங்களுடன் உடன்படாதபோது, உங்கள் இதயத்தில் வெறுப்பு மற்றும் விரோதத்தின் ஒரு சிறிய எறும்பு பிறக்கிறது. நீங்கள் அந்த எறும்பை அக்கணத்திலேயே அழிக்காவிட்டால், அது ஒரு பாம்பாக அல்லது ஒரு டிராகனாக கூட வளரக்கூடும்.”


விமர்சனம் என்பது காரணப்பெயர்களை பற்றியே நிற்க்கும். அதாவது
மானுடப்பிறப்பை எடுத்த வடிவங்கள் ஒன்றையொன்று சுட்டிக்காட்ட
பயன்படுத்தும் பெயர்களே காரணப்பெயர்கள். காரணப்பெயர்கள்
உள்ளவரை விமர்சனங்களும் மாறிமாறி இருந்ததுகொண்டேதான் இருக்கும். அஃதினை அழிப்பது என்பது இயலவே இயலாது. காரணப்பெயர்கள் மறையும் போதுதான் விமர்சனங்களும் மறைந்துபோகும். அதன்பின் எஞ்சி இருப்பது நிலையான ஆத்ம ஸ்வரூபம் ஒன்றேயாம்.

எனவேதான் இஃதினை உணர்ந்த ஞானிகள் காரணப்பெயர்கள் நீங்கிய நிலையிலேயே சதா நிலைத்து நிற்கிறார்கள். அதன் பொருட்டு விமர்சனங்களும் எந்தவொரு தாக்கத்தையும் இஞ் ஞானிகளுக்கு ஏற்படுத்த இயலவே இயலாது.

மகான் ஷ்ரிடி சாய்பாபாவின் உபதேசம்:

“நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போகவேண்டாம். உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதேபோன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப் பெற்றிருக்கும் உணர்வுநிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும். இதை உணர்ந்ததுகொண்டு உங்களிடத்தும் எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னை காண்பீர்களாக. இதை நீங்கள் பயிற்சிப்பீர்களானால் சர்வவியாபாகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்”.

சாய்ராம்.

Leave a comment