“ஸத்ஸங்கத்வே னிஸ்ஸங்கத்வம்”

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்
அல்லவை: என்னும் பதத்திற்கு பாவம்  என்று
பொருள்.எவ்வாறு ஒரு அழுக்கடைந்த பாத்திரத்தை கழுவ பலமுறை நன்னீரை பயன் படுத்துகின்றமோ,அவ்வாறே ஒவ்வொரு மனிதருள்ளும்  அவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவச்செயல்களினால் ஏற்ப்பட்ட வினைப்பயன் என்னும் கர்மவாசனையும் அவர்களது தேகத்தோடு  ஒட்டிக்கொண்டே இருக்கும்.


அதை போக்கிக்கொள்ள தகுந்த பெரியோர்களை நாடி இனிமையான நல் உபதேசங்களை அவர்கள் சொல்லி, இடைவிடாது கேட்க கேட்க இவனின் பாபகர்ம வாசனைகள் தேய்பிறை சந்திரன் போல் தேய்ந்து, வளர்பிறையாக புண்ணியம் பெருகும். ஸத்கர்மங்களில் (நற்காரியங்களில்) நாட்டம்மிகும்.
ஸத்சங்க நாட்டம் மூலம் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள்
பஜகோவிந்தம் என்னும் ஸ்லோகத்தில் உபதேசித்தபடி
ஸத்ஸங்கத்வே னிஸ்ஸங்கத்வம்
னிஸ்ஸங்கத்வே னிர்மோஹத்வம் |
னிர்மோஹத்வே னிஶ்சலதத்த்வம்
னிஶ்சலதத்த்வே ஜீவன்முக்திஃ || 9 ||

From Satsangh comes non-attachment, from non-attachment comes
 freedom fromdelusion, which leads to self-settledness. From self-settledness 
comes Jeevan Mukti.
ஜீவமுக்திக்கு பாத்திரமாவான் என்னும் பொருள்பட வள்ளுவர் பெருமான் இக்குறளை நமக்கு வழங்கியுள்ளார். சாய்ராம்

Leave a comment