You Are That!- “true parents”

 “குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”.


ஒருவர் தமக்கு இப்பொருள்தான் வேண்டும் என்று விரும்பி, முயன்று பெற்றவர் அதனை காலத்திற்கும் வைத்து கொண்டாடுவர். மாறாக எவ்விதமான முயற்ச்சியும் இன்றி இயல்பாக கிடைக்கப் பெற்ற பொருளை வைத்து கொண்டாடுபவர்கள் மிக சொற்ப காலத்திற்கே அதன் பயனை அனுபவிப்பார்கள்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள் அதாவது நம் முன்னால் இருந்து அறியக்கூடிய தெய்வங்களாக அன்னையும் பிதாவும் விளங்குகின்றனர்கள் என்கின்றது அவ்வையின் ஆத்திச்சுடி.
அகத்திய மஹரிஷியிடம் அவரது மனைவி லோபாமுத்திரை தனக்கு ஒரு பிள்ளைபேறு வேண்டும் என்று வினவ,அதற்கு அகத்திய மஹரிஷி உனக்கு எத்தகைய மகன் வேண்டும் என்று கேட்கிறார் ?
சிறந்த அறிவாளியாக ஒரே ஒரு மகன் வேண்டுமா அல்லது அறிவு குறைந்த பல மகன்கள் வேண்டுமா என்று வினவ ?
அதற்க்கு அவ்வம்மையார் அறிவு நிரம்பப்பெற்ற ஒரே ஒரு மகனையே தனக்கு வேண்டி அவ்வாறே பெற்றும் கொண்டார். இதிலிருந்து தாயும் தந்தையுமாக ஆகப்போகின்றவர்களுக்கு ஒரு குழந்தை உருவாகும் முன்பிலிருந்தே பொறுப்பானது விதிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகின்றது.
இத்தகைய ரீதியில் ஒரு கணவனும் மனைவியும் தமக்கு ஒரு மகன் அல்லது மகள் தாங்கள் விரும்பும் தகுதியில் குணநலன்கள் கொண்டதாக அமையப்பெற்று பிறக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி பெற்ற, !
அவர்கள் தம்மக்களின் மழலை சொல்லின் இனிமையானது காலத்திற்கும் அதாவது மழலை பருவம் கடந்த பின்னரும் அப் பெற்றோர்களின் செவிகளில் ரீங்காரமிட்டபடி இருந்து கொண்டிருக்கும்
இதற்கு மாறாக கணவனுக்கும் மனைவிக்கும் கரு உற்பத்தியானதே தெரியாமல், மேலும் பிறக்கப் போகும் குழந்தை மகனா மகளா எப்படிப்பட்ட தன்மையுடையாத இருக்கும் என்பதும் அறியாமல், பிறந்த பின்பே பார்த்துக் கேட்கும் அம்மக்களின், மழலை சொல்லின் இனிமையானது சொற்ப காலமே அப் பெற்றோர்களின் செவியில் ஒலித்துக்கொண்டிருக்கும். இம்மக்களின் மழலைப் பருவம் கடந்து போயின், இப் பெற்றோர்கள் குழலும்,யாழும் இனிதன நாடி செல்வர் என்று
தம்மக்களுக்கே உள்ள தனித்துவத்தை இக்குறளின் மூலம் நமக்கு விளக்கியுள்ளார் வள்ளுவர் பெருமான்.
சாய்ராம்

Leave a comment