Category: You Are That!
-
You Are That! – “Not This (or) That”
“அதுஇது என்னாது அனைத்து அறிவாகும் அதுஇது என்று அறிந்து உந்தீபற அவிழ்ந்த சடையான் என்று உந்தீபற”. திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் :39 ஒவ்வொருவர் உள்ளும் இடைவிடாது சதா ஒலித்துக் கொண்டிருக்கும் ‘நான்’ எனும் சப்த உணர்வு, பஞ்ச பூதங்களின் கலவையான அவர்கள்தம் தேகத்தை ‘இது’ என்றும் ஏனையோர்களின் தேகத்தை ‘அது’ என்றும், அதாவது பஞ்ச பூதங்களாக அறியாமல் உடம்பாகவே அறிந்துகொண்டு, ‘அது இது’ என்று இடைவிடாது சுட்டிக் காண்பிக்கும் சிற்றறிவை…
