மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇட மெல்லாம் சிறப்பு.

இதில் “கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்னும் அவ்வையின் மூதுரை சொல்லின் விளக்கம்:
அதாவது ஒருவர் கற்ற ஞான கல்வியானது வெளிப்படுத்தும் அதிர்வலைகள் எங்கும் பரவி, அதனால் அனேகர் அக்கல்வியின் பயனை அடையும்போது, இக்கல்வியை கற்றவரின் வருகையானது அவர் ஓரிடம் செல்லும் முன்பே அங்கு சிறப்பிக்கப்படுகிறது.

எவ்வாறு சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய ஆன்மீக உரையின் அதிர்வலைகள், அவர் திரும்பி பாரத தேசம் வரும் முன்பே ஏற்படுத்தி தாக்கம்,

அவர் இந்தியாவின் தென்கோடியின் மண்ணை மிதித்த அத்தருணத்தில் இருந்து இன்று வரை அவர் வருகை,

அதாவது சுவாமி விவேகானந்தர் இம்மண்ணில் பிறந்த தினமாக எவ்வாறு கொண்டாடப்பட்டும், சிறப்பிக்கப்பட்டும் இருந்து கொண்டிருக்கிறது என்பதையே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

