“தேவனின் சாயலே மனிதனின் மேனி”

அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார். விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
1 கொரிந்தியர் 15:38

விதை வகைகள் என்பது, ஓரறிவின் பண்பு கொண்ட விதைகள் முதல் ஐந்தறிவின் பண்புகள் கொண்ட விதைகள் வரை கணக்கிலடங்காத விதை வகைகள் உள்ளன.
செடிகள் ஓரறிவு ஜீவராசிகள் ஆகும். இதனுடைய விதை வகைக்கேற்ப தேவன் செடி வடிவ மேனியை கொடுக்கிறார். அதுபோன்றே ஐந்தறிவு ஜீவராசிகள் வரை அதனதன் விதைகளுக்கேற்ப, அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.

ஆனால் ஆறாவது அறிவின் சாரம்சத்தை கொண்ட விதைக்கு மட்டும், தேவன் தமது சித்தத்தின்படியே தம் மேனியையே கொடுக்கிறார். அதாவது காணும் ஒவ்வொரு மனித மேனியும் தேவனின் சித்தத்தின்படி வடிவமைக்கப்பட்ட தேவனின் சாயலே ஆகும்.

இவ்வாறு கிடைத்தற்கரிய மனித மேனி தம் சாயலில் உள்ள தேவனை தம் ஆறறிவால் கண்டுணரத் தவறிவிட்டால்?

ஆறறிவின் ஆற்றல், தேவனால் குறைக்கப்பட்டு கீழான அறிவு கொண்ட மற்ற எண்ணற்ற விதைகளின் மேனிகளாக மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஆமென்!

Leave a comment