
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத தந்தருளினார். எபேசியர் 1:23
Interpretation:
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”… என்னும் திருமூலரின் திருமந்திரம் சொல்படி, ஒவ்வொரு சரீரத்திலும் வியாபித்திருக்கும் எண்ணற்ற “எல்லா வகையான” உயிர் அணுக்களும்,
பிராணன், நீர், உணவு மற்றும் ஆவிக்குரிய உணவான வார்த்தை ஆகிய “எல்லாவற்றாலும்” நிரப்பப்படும் போது தான் அத்தகைய சரீரம், உடம்பும் உயிரும் சேர்ந்து வளர்ந்த நிறைவான சரீரமாகி, நித்திய ஜீவர்களால் நிரப்பப்பட்ட பொதுச் சபைக்கு உகந்ததாக மாறும்.
இதையே வள்ளல் பெருமானும் தம் அகவலில் வேண்டுகோளாக இவ்வாறு பாடியுள்ளார்,
“எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி.”
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

