
உபாகமம் 33:27 :அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
புயங்கள் என்பதற்கு தோள்கள் என்று பொருள்.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வலது புற தோள்பட்டையில் சக்கரத்தையும், இடதுபுற தோள்பட்டையில் சங்கையும் சின்னங்களாக குருவிடம் சென்று முறைப்படி பொருத்திக் கொள்ள வேண்டும் என்பது ஒரு மரபு.
அவ்வாறு முத்திரைகள் இருந்தால் அவர்களது இறுதி காலத்தில் எமதூதர்கள் பாச கயிற்றை கொண்டு அவர்களை நெருங்கும் முன்பே, ஶ்ரீமன் நாராயணனின் தூதர்கள் அவனுக்கு முன் நின்று எமதூதர்களை விரட்டி அழிவிலிருந்து காப்பாற்றுவார்கள் என்பதாக ஒரு ஐதீகம் இருந்து கொண்டிருக்கிறது.
உபாகமம் 33: 27ல் சொல்லப்பட்ட அனாதி தேவனின் நித்திய புயங்கள் (தோள்கள்) என்பதும், சங்கைப் போல் இடைவிடாது ஒலித்துக் கொண்டும், சக்கரத்தை போல் இடைவிடாது உள்ளும் புறமும் சுழன்று கொண்டே இருக்கும் ஜெபத்தை குறிப்பது.
இத் தேவனின் புயங்களை அடைக்கலமாக புகுந்தால், இறுதி காலம் நெருங்கும் போது அவர் உனக்கு முன்னின்று, அவரின் நித்திய புயங்களில் உள்ள ஆதாரத்தைக் கொண்டு, சத்துருக்களைத் (எமதூதர்களை) துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏

