நன்றிக்கும் செய்நன்றிக்கும் உள்ள வேறுபாடு

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. குறள்:110

மெய்ப்பொருள்:
நன்றிக்கும், செய்நன்றிக்கும் உள்ள வேறுபாடு என்பது எது?
“செய்வன திருந்தச் செய்” என்பது அவ்வையின் ஆத்திச்சூடி.  அதாவது அதுவரை செய்து கொண்டிருந்ததில் உள்ள தவற்றை  திருத்தி செய்ய வேண்டும் என்பதே இதன் உட்பொருள். ‘கற்க கசடற’ என்பது வள்ளுவரின் திருக்குறள், அதாவது கற்கக்கூடியதில் கசடும் கலந்திருக்கிறது அதை நீக்கி கற்க வேண்டும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.

அவ்வாறு கசடு நீக்கிய கல்வியை கற்றப் பின், கற்ற அக்கல்விக்கேற்ப செயல்படுவதே, அதாவது அதுவரை செய்து கொண்டிருந்ததில் உள்ள தவற்றை, கற்ற அக்கல்வியை கொண்டு திருத்திக் கொண்டு, திருந்தச் செய்வதே “செய்வன திருந்தச் செய்” என்னும் அவ்வையின் ஆத்திச்சூடிக்கு விளக்கம்.
கைமாறு ஏதும் கருதாமல் இத்தகைய கல்வியை கற்பித்தவருக்கு காண்பிக்கும் நன்றியே செய்நன்றி ஆகும். ஆகையால் தான் வள்ளுவர் பெருமான் மற்ற நன்றிகளை காட்டிலும் இத்தகைய செய்நன்றி மிக உயர்வாக குறிப்பிட்டு,
மேலும் மற்ற நன்றிகளை மறந்தாலும் உய்வுண்டு என்றும், இத்தகைய செய்நன்றியை மறந்தவர்க்கு உய்வு என்பதே கிடையாது என்று எச்சரிக்கிறார்.

வாழ்க தமிழ்🙏 வாழ்க வள்ளுவம்🙏

Leave a comment