Old testament-4

உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. சங்கீதம் 122
அலங்கம் என்பதற்கு அரண் (பாதுகாப்பு) என்று ஒரு பொருள் உண்டு.
“சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்”. (குறள்:744)
பொதுப்பொருள்: காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் (அரண்மனை போன்று) பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.
மெய்ப்பொருள்: காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம், என்னும் இவ் ஏழு குணங்கள்தான் ஒவ்வொரு மனிதர்களுக்குளேயும், கண்களுக்கு புலனாகாமல், மறைந்திருந்து தாக்கக்கூடிய பகைவர்கள்.
“அரிதரிது மானிடர் ஆதல் அரிது” என்பது அவ்வையாரின் வாக்கு. இப்படி பெறப்பட்ட அரிதிலும் அரிதான மானுட தேகத்தை, சுவடே தெரியாமல் அழிக்கவல்ல, கண்களுக்கு புலப்படாத இவ் ஏழு குணமயமான கொடிய பகைவர்களிடமிருந்து இத்தேகத்தை காக்க…
அதே போன்ற கண்களுக்கு புலப்படாத ‘என்குணத்தானாய்’ அணு வடிவாக, இத் தேகத்துக்குள்ளேயே, ‘அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’ என்னும் திருமூலரின் திருமந்திர சொல்படி, உள்ளே நாபிக் கமலத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ‘அன்பு’ என்னும் ‘சிவத்தை’ முறையாக அறிந்து காத்துக் கொண்டால்…
‘அவ்வன்பு’ மிகச்சிறந்த அரணாக இருந்து எதிர்த்துவந்த இவ்- ஏழு பகைவரிருடைய ஊக்கத்தை அழித்து, ‘சமாதானத்தை’ அங்கு நிலைநாட்டும்.
‘அரண்மனை’ என்பதற்கு  அரண் அமைத்து காவல் செய்யப்பட்ட மாளிகை என்று பொருள்:
  அவ்வாறு ஒருவர் தம் அலங்கத்திற்குள்ளே (அரணுக்குள்ளே) ‘சமாதானத்தை’ கர்த்தரின் கிருபையால் நிலைநாட்டும் போது, அத்தையவர் தம் அரணால் காக்கப்பட்ட மாளிகையை ஒத்த தம் உடம்புகுள்ளேயே ‘சுகமும்’ நிரந்தர வாசம் செய்வதை உணரலாம்.

Leave a comment