“சிதம்பர ரகசியம்”


“வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
பட்டய மேதுக்கடி குதம்பாய் பட்டய மேதுக்கடி”.
என்னும் குதம்பை சித்தர் பாடல் “சிதம்பர ரகசியம்” என்னும் இத்தலைப்பிற்கு மிகவும் சாலப்பொருந்தும். ‘மெய்’ என்னும் பதத்திற்கு உண்மை,உடல்,உயிர், உணர்வு என்று பொருள்கள் உள்ளதால்…

“மானுடர் யாக்கை வடிவு சிதம்பரம்” என்னும் திருமூலரின் திருமந்திரமும் குதம்பை சித்தர் பாடலின் பொருளோடு சாலப்பொருந்தும். சிதம்பரம் என்னும் சித்ஆகாசமே குரு,இறைவன்,மற்றும் உயிர்வித்து. அதுவே ஒவ்வொரு மானுட உடம்பின் அகத்திலும், புறத்திலும் அதனதன் வடிவாகவே, ஆனால் வெளிப்படாத சிதம்பர ரகசியமாக அமைந்துள்ளது. காண்பிக்கக் கூடிய கண்ணோட்டம் கொண்ட சித் புருஷர்களால் “சிதம்பர ரகசியம்” அறிவிக்கப்பட்டால், அத்தகையோர் தம்மானுட யாக்கையும் சிதம்பர வடிவாக, வெட்டவெளியே தம் மெய்யாக அமையப் பெற்றதை கண்டுணரலாம். மேலும்…

“அந்த பரம்பொருள் எவ்வுருவு கொண்டதோ அவ்வுருவுவாகவே உள்ளது, ஏனெனின் தன்னை வெளிபடுத்திக் கொள்வதற்காக!” என்னும் பிரகதாரண்யக உபநிடத வாக்கும், திருமூலரின் இத்திருமந்திரமும், மேலே சொல்லப்பட்ட குதம்பை சித்தர் பாடலின் பொருளுக்கும், சிதம்பர ரகசியம் என்னும் தலைப்பிற்கும் இசைவாக அமைந்துள்ளது.

திருச்சிற்றம்பலம்🙏🏿

Leave a comment