ஓம் பஞ்சகோஶாந்தரஸ்தி²தாயை நம꞉ ।

ஓம் பஞ்சகோஶாந்தரஸ்தி²தாயை நம꞉ । என்பது அம்பிகையின் ஓர் நாமம். இதற்க்கு
பஞ்சகோஶ அந்தர ஸ்தி²தாயை நம꞉
பஞ்சகோஶ – உடம்பில் உள்ள அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய ஆகிய பஞ்ச கோசங்கள்
அந்தர – மத்தியில் (ஆத்மாவாக)
ஸ்தி²தாயை – இருப்பவளுக்கு
நம꞉ – நமஸ்காரம் என்று பொருள்.

“ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்” என்பது திருமூலரின் திருமந்திரச் சொல். இவ்வாறு பஞ்சகோசம்களுக்கு மத்தியில் இருக்கும் ஆதிபராசக்தி, ஒளிக்கும் பராசத்தியாக இருக்கிறாள். அவளேதான் இந்த பஞ்சகோசங்களையும் உருவாக்கி அதை ஒளிரச்செய்து கொண்டிருக்கிறாள்.

ஆக பிரகாசமே ஆத்மா, அதுவே எல்லாமே! எனவே மானுட வடிவத்தில் இயங்கும் பஞ்சகோசங்களையும், பிரகாசமாகவே தியானித்தால், அது அம்பிகைக்கு உகந்த வழிபாட்டாக அமையும்🙏🏿

Leave a comment