“மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே”

 


“Everlasting divine power bank”

‘பவர் பேங்க் (power bank)’ என்பதுமின்சார சக்தியை சேமித்து வைக்கும் ஒரு உபகரணம். அதுபோன்றே ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகிற்கு ஒரு தெய்வீக சக்தி வங்கியாக, சேமித்து வைக்கப்பட்ட ஆற்றல் நிறைந்த உபகரணமாகவே வருகிறான். இவ்வுலகிற்கு வந்த பின்னர் ஒவ்வொரு நபரின் உடலும், மனமும், புத்தியும் தொடர்ந்து அந்த ஆற்றலை வெளியிடுகின்றன. அவர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் இழந்த அந்த ஆற்றலை மீண்டும் புதுப்பிக்க உதவுகின்றன.

இவ்வாறு ஆற்றலை சமநிலைப்படுத்தும் மனிதர்களின் உபகரண செயல்பாடுகள் முதுமை காலங்களில் செயலிழந்து போகும் போது, எவ்வாறு பழைய பவர் பேங்க் வேலை செய்யவில்லை என்றால் புதிய பவர் பேங்க் உபகரணத்தை நாடி செல்கின்றோமோ! அவ்வாறே மற்றொரு பிறப்பை மனிதனின் உயிர் நாடிச் செல்கிறது. இருப்பினும், உணவு மற்றும் தண்ணீரைத் தவிர, வேறொரு ஆற்றலை மேம்படுத்தும் உட்கொள்ளும் உணவு ஒன்று உள்ளது என்பதை அவர்களின் அறிவாற்றல் அங்கீகரிக்கவில்லை.

“மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே”

என்பது சிவவாக்கியரின் 93வது பாடல். இது அழிவற்ற பஞ்சாட்சரத்தையே குறிக்கின்றது. சத்குருவின் அறிவுறுத்தலின் மூலம் இந்த பஞ்சாட்சரத்தை ஒருவர் அறிந்து, அதைத் தகுந்த முறையில் உள் மற்றும் வெளி சுவாசத்தின் மூலம் இடைவிடாது உட்கொண்டால், அவர்களின் பிறப்பு என்றென்றும் நிலைத்திருக்கும் தெய்வீக சக்தி வங்கியாக, அதாவது மறுபிறவி இல்லாத “Everlasting divine power bank” ஆக மாறும்.

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

Leave a comment