You Are That! – “பஞ்சாட்சரம்”

சிவவாக்கியர் பாடல்: 073

“சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம்
உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அட்சரம்
கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே”

அட்சரம்: என்பதற்கு ‘அழியாத எழுத்து’ என்று பொருளும்,

கபாடம்: என்பதற்கு ‘காவல்’ என்றும் பொருள்கள் உள்ளது.
அதாவது அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு மானுடப் பிறப்பிலும் இயங்கிக் கொண்டிருக்கும் ‘வாசி’ என்னும் மூச்சானது, காவல் அற்ற வாசலை கடந்து செல்லும் வாயு வாகவே, அதாவது இறந்து இறந்து மீண்டும் மீண்டும் பிறக்கும் வழியிலேயே, தற்சமயம் வரை ஒவ்வொருவர் நாசியிலும் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது!
சிவாயம்: என்பது சிவனின் குணத்தை குறிப்பது. அதாவது சிவாயம் என்பது ‘சிவாய நம’ எனும் அழியாத பஞ்சாக்ஷர எழுத்தாக அதுவே சிவனின் குணமாகவும் இருக்கிறது. ஜனன மரண சாகரத்தை கடப்பதற்கு, அழியாத இவ்-ஐந்தெழுத்தே உற்ற ‘ஒரே வழி’ என நம்பினால்…

கபாடம் உற்ற வாசலைக் கடந்து போய்க் கொண்டே இருக்கும் இவ்-வாயுவை மீண்டும் திருப்பிக் கட்டி இழுத்து தன் திருவடி என்னும் கரையில் சேர்ப்பித்துக் கொள்ளும்!!

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment