திருவாசகம் “பிடித்த பத்து”-6
“சிவபெருமானே! இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
இறவி: என்பது சாவு அல்லது இறத்தலை குறிக்கும் சொல்.
மணிவாசகப் பெருமான் ‘இறவிலே’ என்று இங்கு குறிப்பிடுவது வாழ்வின் இறுதிநிலை அன்று. தன்நிலையை சுட்டிக்காட்டும் ‘தான்’ என்பதே இல்லாத மெய்மறந்த நிலை. இந்நிலையை எட்டுவது என்பது இறத்தலுக்கு ஒப்பான அரிதான நிலை.
இறவிலே எனும் அந்நிலையிலேயும் “உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” என மணிவாசகப் பெருமான் சொல்லிய பாட்டின் பொருளாகக் கொள்ளலாம்.

