திருவாசகம் /சிவபுராணம்-5
” தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!’ என்று,
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து”.
ஓ!’ என்று, சொல்லற்கு அரியானை:
‘ஓ’ என்பதற்கு வியப்புக் குறிப்பு என்று பொருள்.
‘ஓ’ என்னும் வியப்புக்குரிய சொல் இதுவரை பார்த்தறியாத, மெய்யுணராத ஒரு பொருளை காட்சியாக காணும்போது, அதனைப் பார்ப்பவர் தன்னையறியாமலயே வெளிப்படுத்தும் சொல் ‘ஓ’ என்பதாகும். இத்தகைய ஓ!’ என்னும் வியப்புக்குரிய சொல்லை, சொல்லற்கு அருமையான ‘தில்லை கூத்தனை’ பார்த்து சொல்ல வேண்டுமெனில்…
மணிவாசகப் பெருமான் ‘சொல்லிய பாட்டின் பொருள்’ முதலில் உணரப்பட வேண்டும். அதாவது துதிக்கப்படும் திருவாசகத்தின் சொல் (சப்தம்) அத்துதியை பாடுபவரின் ‘மெய்யுடன்’ (உடலுடன்) இரண்டறக் கலந்து ‘மெய்-பொருளாகவே’ மாறி, அதாவது துதிப்பவரின் மெய்யே அவன்தன் பொன்னடிகளாக காணும்போதுதான்…
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

