That moves, That does not move;

“நின்றால் வெளி, அசைந்தால் வளி”
“ஆதியில் ஜோதி இருந்தது,அதன் அசைவிலிருந்து சப்தம் உண்டாயிற்று”
‘வெளி’ என்பதே ஜோதியாக அசைவில்லாமல் இருக்கிறது.
உள்ளும் புறமும் அற்ற நிலையே ‘வெளி’ என்பதாகும். அதாவது
போக்குவரத்து என்பதே இல்லாத நிலையே ‘வெளி’ என்பதாகும்.
ஆகையால் அவ் ‘வெளி’ என்னும் ஜோதியில் அசைவு என்பது உருவாக
வாய்ப்பு இல்லை. அவ்வாறு நின்ற நிலையே ‘வெளி’ என்பதாகும்.

அவ்வாறு நின்ற ‘வெளிக்குள்’ (எவ்வாறு அசையாது எங்கும் பரந்து விரிந்த கடல் பரப்பில் அசையும் அலைகள் உருவாகின்றனவோ) அவ்வாறே நீக்கமற எங்கும் நிறைந்த ‘வெளி என்னும் ஒளியில்’ அசைந்த நிலையினில் வெளிப்படுவதே ‘வளி’ என்னும் சப்தமாகும். எவ்வாறு ‘வெளி வேறு ஒளி’ வேறு இல்லையோ அதுபோல ‘வளி வேறு சப்தம்’ வேறு என்பதும் இல்லை. ஆயினும் அவ் ‘வளி’ என்பது உள்மூச்சு வெளிமூச்சு என்று பிளவு பட்டுள்ளது. ஆகையால் போக்குவரத்துக்குட்பட்டு உள்ளது. அதாவது சதா அசைந்த நிலையிலேயே இருந்து கொண்டு இருப்பது.
நின்ற ‘வெளி’ என்னும் ‘ஜோதியில்’ வெளிப்பட்ட அசையும் ‘வளி’ என்னும் ‘சப்தம்’, மீண்டும் அவ் ‘வெளி’ என்னும் ‘ஒளியில்’ ஒடுங்கினால் !

“வெளிக்குள் வெளி(வளி) கடந்து சும்மா இருக்கும் சுகம்” என்று
தாம் பெற்ற சுகத்தை பாடி அருளிய வள்ளல் பெருமானைப் போல் எல்லா உயிரும் சுகித்து இருக்கலாம்.

சாய்ராம்.

Leave a comment