“நின்றால் வெளி, அசைந்தால் வளி”
“ஆதியில் ஜோதி இருந்தது,அதன் அசைவிலிருந்து சப்தம் உண்டாயிற்று”
‘வெளி’ என்பதே ஜோதியாக அசைவில்லாமல் இருக்கிறது.
உள்ளும் புறமும் அற்ற நிலையே ‘வெளி’ என்பதாகும். அதாவது
போக்குவரத்து என்பதே இல்லாத நிலையே ‘வெளி’ என்பதாகும்.
ஆகையால் அவ் ‘வெளி’ என்னும் ஜோதியில் அசைவு என்பது உருவாக வாய்ப்பு இல்லை. அவ்வாறு நின்ற நிலையே ‘வெளி’ என்பதாகும்.
நின்ற ‘வெளி’ என்னும் ‘ஜோதியில்’ வெளிப்பட்ட அசையும் ‘வளி’ என்னும் ‘சப்தம்’, மீண்டும் அவ் ‘வெளி’ என்னும் ‘ஒளியில்’ ஒடுங்கினால் !
“வெளிக்குள் வெளி(வளி) கடந்து சும்மா இருக்கும் சுகம்” என்று
தாம் பெற்ற சுகத்தை பாடி அருளிய வள்ளல் பெருமானைப் போல் எல்லா உயிரும் சுகித்து இருக்கலாம்.


