“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே”
‘தேகம்’ என்பது பஞ்ச வாயு என்னும் சூத்திரத்தினால் வடிவமைக்கப்பட்ட மனத்தின் உருவகமாகும். ‘மந்திரம்’ என்பது வாசியை திருவாசியாக மாற்றி அமைக்கும் சப்த அதிர்வுகள். மந்திரத்தால் வாசி திருவாசியாக மாறும்போது, பஞ்ச வாயு என்னும் சூத்திரத்தினால் வடிவமைக்கப்பட்ட தேகமும் மந்திரமயமாகவே ஆகிவிடும்.
தேகம் மந்திரமானால் அத்தேகத்தை வடிவமைத்த மனமும் மந்திரமயமாகி செம்மையாக மாறிவிடுகிறது.
அவ்வாறு மனமது செம்மையானால் ‘செபித்தல்’ என்னும் முயற்சியின்றி மந்திரம்’ அதுவாகவே திருவாசியாக பஞ்ச வாயுக்களாக தேகம் முழுவதிலிருந்தும் இடைவிடாது சதா அதன் பெருமையை ஒலித்துக் கொண்டேயிருக்கும்.


