You Are That! – “Sperm protector”

“தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்”. (குறள்:256)

அறத்துப்பால்: புலான்மறுத்தல்

பொதுப்பொருள்:

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

மெய்ப்பொருள்:
ஒரு ஆண் ஒரு பெண்ணின் மீது காமவயர்ப்பட்டு (தினவெடுத்து) அப்பெண்ணின் உடம்பை (புலாலை) புணர முற்படும்போது, அவனது தேகத்தினின்று வெளிப்படும் ”விந்துவில்’ உள்ள பல்லாயிரக்கணக்கான உயிர் அணுக்கள் செத்து மடிக்கின்றன.

அதாவது பல்லாயிரக்கணக்கான உயிர் அணுக்கள் ஒர் ஆணின்‘தினற்பொருட்டால்’ கொல்லப்படுகின்றது. அவ்வாறு
‘தினற்பொருட்டால் கொல்லாது’ தன் ‘விந்தை’ பாதுகாக்கும் குலமாக...

ஆண் இனம் விளங்கினால், அதற்குரிய விலையின் பொருட்டு தன் ஊனை(உடம்பை) விற்கும் ‘விலைமாதர்கள்’ குலமும் இல்லாமலேயே போய்விடும் என்பதாக இக்குறளுக்கு பொருள் கொள்ளலாம்.
சாய்ராம்.

Leave a comment