You Are That! – “Repose with Action”

பைபிள்: (மத்தேயு 11:28) “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்
Hazrat Inayat Khan says:

“இளைப்பாறல் என்பது எல்லா சிந்தனை மற்றும் தியானத்தின் ரகசியம், வாழ்க்கையின் சாராம்சத்துடன் இணைந்திருக்கும் ரகசியம், இது எல்லாவற்றின் சாராம்சமாகும். ஒருவர் இளைப்பாறும் பழக்கமில்லாதபோது, அத்தகைவர் தன்னுள் என்ன இருக்கிறது என்பதை உணர இயலாது.”

கௌதம புத்தர்:“என்னுடையது என்ற எண்ணத்தாலேயே…
உன்னுடைய சுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது…
அனைத்துமே திருப்பி கொடுக்கவேண்டிய கடன்கள்…
என்ற உண்மையை நீ உணரும் போது…
எல்லா சுமைகளும் இறங்கி விடுகிறது.
“அதன் பிறகு உன்னை நிம்மதி

“என்னுடையது என்ற எண்ணத்தாலேயே…
உன்னுடைய சுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது…
அனைத்துமே திருப்பி கொடுக்கவேண்டிய கடன்கள்…
என்ற உண்மையை நீ உணரும் போது…
எல்லா சுமைகளும் இறங்கி விடுகிறது.
“அதன் பிறகு உன்னை நிம்மதி

அமைதியாக சூழ்ந்து கொள்ளும்!”

Interpretation:

இளைப்பாறலும், இடைவிடாத செயலும் வேறு வேறு அல்ல!
இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று விலகாதவை! இதன் ரகசியத்தை அறிந்து கொண்டவருக்குத் தான் தன்னுள் என்ன இருக்கிறது என்பதை உணர இயலும்.

பாரம்’ என்பது ஒவ்வொருவரும் அவரவர்களின் ‘உடம்பே தான்’ என்று எண்ணிக்கொண்டு, இளமையில் மகிழ்ச்சியாகவும் முதுமையில் வருத்தப்பட்டும், வளமையில் மகிழ்ச்சியாகவும் வறுமையில் வருத்தப்பட்டும், மாறி மாறி சுமந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் ஒருவரும் அறிந்திலர் இவ்வுடம்பை தாங்கிக்கொண்டு, இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் சுவாசத்தை!

1.”God is the breath of all breath” என்பது சந் கபீர்தாசரின் அருள்வாக்கு.
2.Taittirîyaka-Upanishad: Part :3:7

Breath is food; the body eats the food. The body rests on the breath, breath rests on the body. This is the food resting on food.
எவரொருவர் தம் சரீரத்தை பிராண ஸ்வரூபியாக விளங்கிக்கொண்டிருக்கும்
இறைவனிடம் ஒப்படைத்து இளைப்பாற இயலுமோ, அத்தகைவரின் சரீரத்தில்
பிராணனும் இளைப்பாறும். அதாவது இளைப்பாறலும், செயலும் இடைவிடாது
ஒன்றுசேர நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இத்தகையோரே பாக்கியவான்களாக

மரணமில்லா பெருவாழ்வு எய்தி, நித்திய ஜீவர்களாய் வாழ்வார்கள்.
சாய்ராம்.

Leave a comment