You Are That! – “Nurturer of the soul”

Taittirîyaka-Upanishad: Part :3:9

3. “அன்னத்தை மிகுதியும் உண்டாக்க வேண்டும். அது விரதம். பூமியும் ஆகாசமும் அன்னமும் அன்னாதமும் ஆகின்றன. பூமியில் ஆகாசம் ஒடுங்கி நிற்கும். ஆகாசத்தில் பூமி ஒடுங்கி நிற்கும்… கீர்த்தியால் மகானாகிறான்.
Interpretation:

‘பூமி’ என்பது காற்று, மண், நீர் மற்றும் நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஒவ்வொரு சரீரமும் பூமியின் அம்சமே ஆகும். பூமியில் விளையும் உணவுப் பயிர்கள் யாவும், அதே அம்சங்கள் அடங்கிய சரீரத்துக்கு, பிராணன் மற்றும் நீருடன் கலந்த உணவாக ஆகிறது. இவ்வாறு அன்னமயமான சரீரம், ஒவ்வொரு சரீரத்துள்ளும் விளங்கிக் கொண்டிருக்கும் ஆகாசத்துக்கு உணவாகின்றது. பூமியும் ஆகாசமும் ஒன்றிலொன்று அடங்கப்பெற்ற பின் அதன் தன்மைகள் முழுவதும் மறைந்து அங்கு அன்னமே நிலை பெறுகிறது.

இவ்வாறாக அன்னம் அன்னத்தில் ஒடுங்கி “அன்னம் பிரம்ம மயம்” ஆக மாறுகிறது. எவன் இங்கனம் அன்னம் அன்னத்தில் நிலைபெறுவதை அறிகின்றானோ அவன் நிலையான பதவியை எய்துகிறான்.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”

என்பது திருமூலர் திருமந்திரம்:
அதாவது பூமியின் அம்சங்களை கொண்ட இச் சரீரம், முறைப்படுத்தப்பட்ட பிராணனுடன் கலந்த நீர் மற்றும் மண்ணில் விளையும் பயிர்கள் இவற்றை உணவாக உட்க்கொண்டு மிகுதியாக வளர்ந்தது, அதனுள் குடிகொண்டிருக்கும் உயிர் ஆகிய (சித்) ஆகாசத்திற்கு உணவாகி உயிரையும் வளர்க்கிறது. விரதம் என்பதும் இதுவேயாம் !

Taittirîyaka-Upanishad: Part :3:10:6
Conclusion:
“நானே அன்னம், நானே அன்னம், நானே அன்னம் !
நானே அன்னாதம், நானே அன்னாதம், நானே அன்னாதம் !
(உணவும் நானே உண்பவனும் நானே.) உணவுக்கும் உண்பவனுக்கும் உள்ள உறவை உண்டாக்கியவனும் நானே ! உறவை உண்டாக்கியவனும் நானே ! உறவை உண்டாக்கியவனும் நானே !
அழகும் ஒழுங்குமே (ருதம்) உருக் கொண்ட இவ்வுலகிற்கு முன்னுதித்தவனாக நானே உள்ளேன். தேவர்களுக்கும் முன்னவன் நான். அழியாப் பதவியின் நடுநிலை நான். (அன்ன ரூபியான) என்னை இவ்வாறாக அறிந்து எவன் கொடுக்கிறானோ அவன் இதனால் ஆத்ம ரக்ஷணம் செய்தவனாகிறான்.
இங்ஙனம் அறிந்து கொடுக்காவிட்டால்…
உண்பவனை உணவாகிய நான் உண்டுவிடுகிறேன். ( எவ்வாறெனின் அரிதிலும் அரிதாய் கிடைக்கப்பெற்ற இம்மானுடப் பிறவியிலிருந்து மீண்டும் கீழான பிறவிகளான தாவர இயல்புக்கு தள்ளப்பட்டு, ஏனையொருக்கு உணவாக மாறி மாறி போய்க்கொண்டே இருப்பார்கள்.)

சாய்ராம்.

Leave a comment