Taittirîyaka-Upanishad: Part: 3:7
1. அன்னத்தை இகழக் கூடாது. அது விரதம், (எது உண்ணப்படுகிறது அது அன்னம் எது உண்கின்றதோ அது அன்னாதம்) பிராணனும் சரீரமும் அன்னமும் அன்னதாமும் ஆகின்றன. பிராணனிடம் சரீரம் ஒடுங்கி நிற்கும் சரீரத்தில் பிராணன் ஒடுங்கி நிற்கும் இவ்வாறாக அன்னம் அன்னத்தில் ஒடுங்கி நிற்கின்றது. எவன் இங்ஙனம் அன்னம் அன்னத்தில் நிலைபெறுவதை அறிகின்றானோ அவன் நிலையான பதவியை எழுதுகிறான்.
Interpretation:
ஏனென்றால், ஒவ்வொரு சுவாசமும் நித்திய குரலுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் முறையற்ற வழியில்! சத்குருவின் அருளால், இந்த நித்திய குரல் சுவாசத்துடன் சரியாக இசைக்கப்பட்டால்?
சரீரம் அதை உணவு வடிவில் உறிஞ்சுகிறது, இதன் மூலம் சரீரம் நித்திய குரலில் ஊடுருவுகிறது, நித்திய குரல் சரீரத்தில் ஊடுருவுகிறது. சத்குருவால் நித்திய குரல் மற்றும் சுவாசத்தின் சரியான கலவையைப் பெற்ற எவருக்கும் இது பொருந்தும்.
பிராணனும் சரீரமும் ஒன்றிலொன்று அடங்கப்பெற்ற பின் அதன் தன்மைகள் முழுவதும் மறைந்து அங்கு அன்னமே நிலை பெறுகிறது. இவ்வாறாக அன்னம் அன்னத்தில் ஒடுங்கி “அன்னம் பிரம்ம மயம்” ஆக மாறுகிறது. எவன் இங்கனம் அன்னம் அன்னத்தில் நிலைபெறுவதை அறிகின்றானோ அவன் நிலையான பதவியை எய்துகிறான். விரதம் என்பதும் இதுவேயாம் !
Sound waves produced by the singing bowls penetrate the tissues in the human body, due to the high contents of water (70 – 80%) in our system. … The balance of our cells and tissues can be restored through the influence of appropriate sounds, in accordance with the resonance principle.
மாறாக, இந் நித்திய குரல் சுவாசம் வழியே உண்பவரின் சரீரத்துடன் முறையாக பொருத்தப்படவில்லை என்றால், ஒவ்வொரு சுவாசமும் இகழப்பட்ட உணவாகவே மாற, அஃதினை உணவாக உட்கொண்டு வாழும் சரீரத்தை பிராணன் சிறிது சிறிதாக சிதைத்து இறுதியில் மரணக்குழியில் தள்ளிவிடும்.
சாய்ராம்.


