“அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்”.
அதிகாரம்: வெஃகாமை : குறள் 176:
பொதுப்பொருள்:
அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
மெய்ப்பொருள்:
பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் அவர்கள் யாராக ! இருந்தாலும் கெடுவார்கள் என்பது உறுதி. அவ்வாறு இருக்க வள்ளுவர் இக்குறளில் அருளை விரும்பி அறநெறியில் நிற்பவர்களுக்கு என்று தனித்து குறிப்பிட காரணம்?
சாய்ராம்.


