You Are That! – “Good at all times”

“அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்”.
அதிகாரம்: வெஃகாமை : குறள் 176:

பொதுப்பொருள்:

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
மெய்ப்பொருள்:

பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் அவர்கள் யாராக ! இருந்தாலும் கெடுவார்கள் என்பது உறுதி. அவ்வாறு இருக்க வள்ளுவர் இக்குறளில் அருளை விரும்பி அறநெறியில் நிற்பவர்களுக்கு என்று தனித்து குறிப்பிட காரணம்?

ஏனெனில் அருளை அறியாத ஏனையோர் இக்குற்றங்களை செய்யின் அவர்களையும் “வருங்காலம்” என்பது நிச்சயம் தண்டிக்கும். ஆனால் அறநெறியில் நின்றவர்கள் ஆசையின் உந்துதலினால் இக்குற்றங்களை செய்த காரணம், அதுவரை அவ்வருளால் கிட்டிய பயன்கள் அனைத்துமே “நிகழ்காலத்திலேயே” அவர்கள் கண்முன்னேயே ஒன்றுமேயில்லாமால் நாசமாகி போய்விடும். மேலும் இக்கேட்டிலிருந்து மீளும் உபாயம் என்பதும் இத்தகையோருக்கு உருவாகவே உருவாகாது என்னும் எச்சரிக்கையோடு வள்ளுவர் இக்குறளை நமக்கு தந்துள்ளார்.

சாய்ராம்.

Leave a comment