You Are That! – “Unified knowledge”

“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான். செத்தாருள் வைக்கப் படும்”
(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:214)

மெய்ப்பொருள்:

‘ஒத்தது’ என்பதிற்கு: ஒப்பானது; தகுதியானது என்று பொருள் உள்ளது.
வாழும் ஒவ்வொரு மனிதருள்ளும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தூயஅறிவால்தான், ஒவ்வொரு மனிதர்களும் தாம் உயிருடன் இருப்பதை உணரமுடிகிறது. அவ்வாறு தன் இருப்பை மீண்டும் உணரவே முடியாத ஒருநிலை உருவாகும் போது, அஃதினையே மூளைச் சாவு (Brain death) என்றும் சொல்லப்படுகிறது.

“அதாவது ஒருவரின் ‘மரணம்’ இதயத்தின் துடிப்பு நின்றால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது, மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளியின் உயிரைப் பொறுத்தவரை, அஃது இன்னும் அவரது உடலில் உள்ளது, அஃது அவரது உடலை விட்டு வெளியேறுவது என்பது அவரது இதயத்தின் துடிப்பு நின்றால் மட்டுமே. அதுவரை அவர் உயிருடன் இருந்தாலும் செத்தாருள் வைக்கப்படுவார்”…
வள்ளல் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அகவல்:“பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய்என்
அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி” (113)
“பிறிவேது இனி உனைப் பிடித்தனம் உனக்குநம்
அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி”(285)
“அறிவுக்கு அறிவினில் அது அது அதுவாய்
எறிவுற்று ஓங்கிய என்தனி இன்பே” (1245)

“பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய்என்
அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி” (113)
“பிறிவேது இனி உனைப் பிடித்தனம் உனக்குநம்
அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி”(285)
“அறிவுக்கு அறிவினில் அது அது அதுவாய்
எறிவுற்று ஓங்கிய என்தனி இன்பே” (1245)

இத்தகைய ஒப்புமைக்கு அப்பாற்பட்ட அறிவுடன் ஒத்து, எறிவுற்று (பிரிக்கவே முடியாத) விளங்கும் தகுதியினை, அவ்வறிவு பிரகாசித்துக் கொண்டிருக்கும் போதே அடைந்தவர்களே உயிருடன் வாழ்பவராய் கருதப்படுவார்கள்.

அவ்வாறு அவ்வறிவு பிரகாசித்துக் கொண்டிருக்கும் போதே அதனுடன்

‘பொருந்த’ முயலாதவர்கள்,
As stated in Bible, Matthew 8:22

In Jesus said, “Follow Me, and let the dead bury their own dead.” He was responding to a request from one of His followers who asked to be excused from his responsibilities to “go and bury [his] father” (Matthew 8:21).
உயிருடன் இருக்கும்போதே செத்தாருள் வைக்கப்படுவார்கள் என்பதாக பொருள் கொள்ளலாம்.

சாய்ராம்.

Leave a comment