“வகையறச் சூழா தெழுதல் பகைவரைப். பாத்திப் படுப்பதோ ராறு”. (குறள் 465:)
பால்: பொருட்பால்:அதிகாரம்:தெரிந்துசெயல்வகை:
பொதுப்பொருள்:
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.
மெய்ப்பொருள்:
ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் ஐம்புலன்களே பகைவர்கள் ஆகும். இவ் ஐம்புலன்களையும் வெல்லக்கூடிய ஆற்றல் என்பதும் அவரவர்களின் அகத்துள்ளேயே அடங்கபெற்றுள்ளது. இவ் ஆற்றலின் போக்கை முறையாக அறிந்து அஃதினை தனதாக்கிக் கொள்ளக்கூடிய செயல் வகைகளையும் அறியப்பெறும் முன்பே, ஐம்புலன்களையும் அடக்கியாள வேறு வழிமுறைகளை கையாண்டால்?
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே”.
#2/005:1 நற்றுணை விளக்கம்:
சாய்ராம்.


