You Are That! -“Undefeatable”

“படி அடி வான்முடி பற்றினும் தோற்றா

அடிமுடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி”

அகவல்:129


படி அடி வான்முடி பற்றினும்:

திருவடியையும் திரு முடியையும் காணும் பொருட்டுக்கீழும் மேலுமாகத் திருமாலும் பிரமனும், மண்ணை அகழ்ந்தும் விண்ணில் பறந்தும் காணமுடியாத ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியின்

‘படி அடி வான்முடியை’ அயனும், மாலும் பற்றினாலும்…
தோற்றா: அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசம் எல்லையில்லாமல் இடைவிடாது வியாபித்துக் கொண்டே போவதால் தான், அஃது ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி’ என மாணிக்கவாசக பெருமானாலும், வள்ளல் பெருமானாலும் புகழ்ந்து பாடப்பெற்றுள்ளது. ஆகவே அயனாலும், திருமாலாலும் ‘படி அடியும் வான்முடியும்’ பற்றப்பட்டாலும்?

அருட்பெருஞ்ஜோதியின்அடிமுடி’ என்பது எல்லை என்பதே இல்லாமல் வியாபித்துக் கொண்டே போவதால், அயனாலும், திருமாலாலும்

‘படி அடியும் வான்முடியும்’ பற்றப்படாததாகவே இருந்து கொண்டிருக்கிறது.

ஆகவே அஃது தோற்றதாக ஆகாது.

நாசா விஞ்ஞானிகளின் தற்போதிய கண்டுபிடிப்பின் வெளியீடு:
30 ஆண்டுகளில், தொலைநோக்கி 1.3 பில்லியன் புகைப்படங்களை எடுத்துள்ளது. இது இப்போது மிகவும் சவாலான பணியில் கவனம் செலுத்துகிறது – பிரபஞ்சம் எவ்வளவு விரைவாக விரிவடைகிறது என்பதைக் கண்டறிகிறது.

சாய்ராம்.

Leave a comment