You Are That! -“Real pathfinder”

“எவ்வழி மெய்வழி என்பவே தாகமம்

அவ்வழிஎனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:201)

‘மெய்‘ என்பதற்கு உண்மை என்றும் மற்றும் உடல் என்றும் பொருள் உள்ளது.
மெய்வழி என்பது:

“என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடைய அன்பே”

“என்னுளே விளங்கி என்னுளே பழுத்து

என்னுளே கனிந்த என்னுடைய அன்பே”

(அகவல்:1481-1484)

அதாவது ‘மெய்’ என்னும் இவ்வுடம்புக்குள்ளேயே அரும்பி இருக்கும் அருட்பெருஞ்ஜோதியை கண்டு அஃ தினை ‘இம்மெய்’ சென்றடையும் வழியே ‘மெய்வழி’ என்னும் உண்மையான வழியாகும்.
ஆகமம்:

இவ் அருட்பெருஞ்ஜோதியை தம்முள் கண்டு அதன் மெய்வழியில் சென்று

ஜோதிர் சொரூபத்தை தாமும் அடையப்பெற்ற, திருஞானசம்பந்தர்,
மணிவாசகப் பெருமான்,போன்ற சான்றோர்கள் பெற்ற அனுபவமே
‘ஆகமம்’ என்னும் வேத சாஸ்திரங்கள்.
‘வேதாகமம்’ சொல்லிய ‘இம்மெய்வழியை’ எமக்கும் காட்டியருள்க என்று அருட்பெருஞ்ஜோதியிடம் வள்ளல் பெருமான் விண்ணப்பித்து போன்று,
அகவல் பாராயணம் செய்யும் அனைவரும் விண்ணப்பித்து

‘அவ்வழியை’ அருளாகப் பெறலாம்.
சாய்ராம்.

Leave a comment