“சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே
ஆமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி” (205)
சா-என்பதற்கு சாதல் என்றும், மாறு-என்பதற்கு பிறவி
என்றும் பொருள் உள்ளது.
ஆ-என்பது அழிவில்லாத ஆன்மாவை குறிக்கும் சொல்.
மாறு-என்பதற்கு ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல்
என்றும் மற்றொரு பொருள் உள்ளது.
“சாமாறு அனைத்தும் தவிர்த்து”- இறந்து இறந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதவிதமான பிறவிகளாக மாறி மாறி பிறப்பெடுக்கும் அவலநிலைகள் அனைத்தையையும் நீக்கி, “ஆமாறு”- அழிவற்ற ஆன்மாவாக என்னை மாற்றி அருளிய அருட்பெருஞ்ஜோதி.
சாய்ராம்.


