You Are That! – “vitalizer”

“சாவா நிலை இதுதந்தனம் உனக்கே
ஆவா என அருள் அருட்பெருஞ்ஜோதி”

அருட்பெருஞ்ஜோதி அகவல் (210)

‘சாகும் நிலை’ என்பது உடலை விட்டு உயிர் பிரிந்தது செல்வதே. அவ்வாறாயின் ‘சாவா நிலை’ என்பது உடலை விட்டு உயிர் பிரியாத நிலையே என்று பொருள் கொள்ளலாம். அதாவது இம்-மெய்யுடன் (உடம்புடன்) இவ்-உயிர் கலந்து நிற்பதே ஆகும்.

இதற்க்கு உவமானப் பொருளாக ‘வ்’ என்னும் மெய் எழுத்துடன் ‘ஆ’ என்னும் உயிர் எழுத்து கலந்து வ்+ஆ= ஆவா என மருவி நிற்பது போல, தம் மெய்யுடன் உயிர் கலந்தபின் மருவி கிட்டும் ‘சாவா நிலையினை’ இக்கணமே…

‘ஆவா’ என, ஆவா என்பதற்கு இரக்க வியப்பு, ஆனந்த குறிப்பு என்று பொருள் உள்ளது. அதாவது அருளின் இரக்கதின் வியப்பாக, ஆனந்த்தத்தின் குறிப்பாக தமக்கு தந்தருளவேண்டும் அருட்பெருஞ்ஜோதி என்னும் பொருள்பட வள்ளல் பெருமான் பாடியுள்ளார்.

சாய்ராம்.

Leave a comment