You Are That!- “Good swimmer”

“பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேராதார்”.

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:10)

பிறவி,அதாவது மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது

கடல் போல் இருக்கிறது. இஃது எவருக்கு எனின்,
தம் அறியாமையால் பிறவியைபெரும் கடலாகவே
கண்டு, நீந்த முயற்சிக்காமல், அஃதிலேயே மூழ்கி மூழ்கி
தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமேயாம்!

இத்தகைய நீந்தார், இறைவனடி சேராதார்.

இறைவனின் திருவருள் கூடிடின், அத்தகையவருக்கு பிறவி, பெரும்கடல் என்னும் அறியாமை விலகி, அஃதினை கருணை கடலாகவே காண்பார்கள். இத்தகையோருக்கே நீந்தும் ஆற்றல் வாய்க்கும்.

Sairam.

Leave a comment