ஆதியீறு இல்லா அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:127)
ஓதி: என்பதற்கு அறிவு என்று ஒரு பொருள் உண்டு.
கேனோபநிஷத்து 1:3ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
“அது- ஜோதி அறிந்த பொருட்களைவிட வேறு, அறியாத
பொருள்களுக்கும் அப்பாற்பட்டது”.
ஓதி ஒதாமல் உறவு எனக்கு அளித்த:
அறிந்த பொருட்களைவிட வேறாகவும், அறியாத பொருள்களுக்கும் அப்பாற்பட்டதாயும், சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஜோதியுடன் இரண்டற கலந்திடும் கிடைத்தற்கரிய உறவை எனக்கு அளித்த…
ஆதி என்னும் எல்லையே இல்லாத அருட்பெருஞ்ஜோதியே!
“ஓதிநின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம்
ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:83)
சாய்ராம்.


