போற்றி வழங்கு நெறி”.
அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:477)
பொதுப்பொருள்:
எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.
இங்கு வள்ளுவர் ஆற்றின் எனக்குறிப்பிடுவது ஒருவரின் ஆற்றலையேயாகும். ஈகை எனக்குறிப்பிடுவதும் பொன்னையோ அல்லது பொருளையோ அன்று. வழிவழியாக வந்த செவிச்செல்வத்தையே !
இச் செல்வத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஒருவர் அதை பிறருக்கு ஈயும்போது அத்தகையவரின் ஆற்றலை தம் அறிவால் அளவறிந்து ஈக என்கிறார் வள்ளுவர் பெருமான்.
அவ்வாறு ஆற்றலின் அளவறியாமல் இச் செவிச்செல்வம் ஈயப்ப்படுமின் அவையனைத்தும் “விழலுக்கு இறைத்த நீர் போல்” வீணாகி போய்விடும் என்று மறைமுகமாய் எச்சரிக்கின்றார்.


