“ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ் ஜோதி”-23
“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே”.
– திருமந்திரம் (திருமூலர்)
இங்கு திருமூலர் சொல்லும் “ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்” என்பது நாவினால் ஓதாது உணர்வினாலேயே உணரக்கூடிய மந்திரமாகும். எவரொருவர் அகத்தில் ஒளியானது தூண்டப்பட்டு மிளிர்கின்றதோ, அத்தகையவரே அவ்வொளியருளின் அசைவினால் உண்டாகும் சப்த ஒலியை கேட்டு, அதை “ஓதாது உணர்ந்திடவும் ” இயலும்.
இ ஃது அனைத்திற்கும் ஆதாரமாகிய அவ்வகவொளியே “அருட்பெருஞ் ஜோதி”
“வார்த்தையை பயன்படுத்தாத குரல் ஒன்று உள்ளது,
அதை கேளுங்கள்” என்பது சூபி ஞானி ரூமியின் கூற்று.
சாய்ராம்.


