You Are That!- “Found the true friend”

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு”.

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல,

நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு

என்பது இக்குறளின் பொதுப்பொருள்.

கீதைப் – அத்தியாயம் -6, தியானயோகம், சுலோகம் -(5)

தன்னைத் தன்னாலே உயர்த்திக் கொள்க. தன்னை இழிவுறுத்தலாகாது. ஏனென்றால் தானே தனக்கு நண்பன்,தானே தனக்குப் பகை என்பது கீதை வாக்கு.

ஒருவர் உடலில் இருந்து உடுக்கை நழுவும் பொழுது முதலில் அதனை உணர்வது அவரின் உணர்வே. அவ்வுணர்வே அவரின் கைகளை கண் இமைக்கும் நேரத்தில் செயல்பட வைத்து அவர்தம் மானத்தை காப்பாற்றுகிறது. தக்க சமயத்தில் அத்தகைய உணர்வு வெளிப்படாது போயின் அவமானத்திற்குள்ளாகா நேரிடும். இவ்விடத்தில் அவரின் உணர்வே நட்புக்கு இலக்கணமாக செயல்படுகிறது.

“ஊணுடம்பு ஆலயம்” எனபது திருமூலரின் திருமந்திர சொல்
ஒருவரின் தேகம் சிவாலயமாக இருப்பது என்பது அவ்வுடம்பிநுள் (உறுபொருளாம் தூய உணர்வான) சிவம் குடிகொண்டு இருக்கும் வரைதான் !!!

சிவம் போயின் இவ்வுடம்பு சவமே. இதுவே திருவள்ளுவர் குறிப்பிடும் இடுக்கண் என்பது. இத்தகைய “இடுக்கண் களையும்” திறனை படைத்தது இவ்வுடம்பினுள் குடிகொண்டுள்ள தூய உணர்வான சிவமே. அச்சிவத்தை ஒருவர் முறையாக அறிந்து, தம்முள் உணரப்பெற்று , அதனுடன் தானே தனக்கு நண்பனாக ஆகப் பெறின்…

இவ்வுடலில் இருந்து உயிர் நழுவும் தருணத்தில்“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே” அபயஹஸ்தமாக சிவஹஸ்தம் (pureself,தூய உணர்வு) கண் இமைக்கும் நேரத்தில் வெளிப்பட்டு இவ்வுடம்பினின்று இவ்வுயிர் நழுவாவண்ணம் காத்து, சவமாய் (சாம்பலாய்) போகாமல் சிவமயமாகவே ஆக்கிவிடும். மரணத்தை வென்ற மார்கண்டேயரைப் போல !

“வானைக்காவில் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்தேனைக்காவில் இன்மொழித் தேவி பாகமாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதும் ஏதமில்லையே”-

தேனைக்காவில் இன்மொழித் தேவி பாகமாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதும் ஏதமில்லையே”-

திருஞானசம்பந்தர் சுவாமிகள்
Kabir says : “He opens the veil within your being and shows himself in front of you!! HE only is our true friend. At the time of our birth (here it refers spiritual birth or the moment when this creation came in existence and we as separate being came into picture) he was the only friend and when the journey of the soul has come to an end, I see him only as true friend. he has been our friend throughout our all lives, only it took whole journey from the origin to coming down this material world and going back to our source to make us realize this truth!!”
சாய்ராம்

Leave a comment