You Are That!- “beyond the fate”

“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”.

இருள்சேர்: இருளில் சேர்வது எது ?

ஒரு குழந்தை உருவாக காரணமாகும் ஆண் பெண் இருவரது சேர்கை நடப்பது இருளில்தான் இதுவே இருள்சேர் என்பது.

இருவினை: இருவினைகள் என்பது கர்மபலன் மற்றும் ஜென்மபலனை குறிப்பதாகும்.

இதில் கர்மபலன் என்பது அக்குழந்தை உருவாக காரணமாகும் தாய் தந்தை இவர்களின் கர்ம (எண்ணங்களின்) பலனை குறிப்பது. ஜென்மபலன் என்பது உருவாக வந்த அக்குழந்தையின் முன் ஜென்ம கர்மபலனை குறிப்பது.

சேரா இறைவன்: மேற்கூறிய இருள்சேர் மற்றும் இருவினைகள் இவற்றில் சேராமல், தனித்து தம்மெய்யை பொருளாக்கிய தகுதியில் வாழும் இறைவனுக்கு ஒப்பான சான்றோர்கள்!
பொருள்சேர்: இத்தகைய சான்றோர்களோடு தம் மெய்யயும் (தம் உடம்பையும் ) தம் மெய் (உண்மை)பொருளாக்க வேண்டி சேர்தல்.
புகழ்புரிந்தார் மாட்டு: “தோன்றின் புகழொடு தோன்றுக” என்னும் வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப புகழொடு தோன்றிய சான்றோர்களில் சேர்ந்து இவரும் ஒன்றாவர்.

“இன்றிபோக இருவினையும் கெடுத்து

ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான்

நின்ற வேங்கடம் நீள்நிலத்துள்ளது

சென்று தேவர்கள் கைதொழுவார்களே”

என்னும் நம்மாழ்வார் பாசுரமும் இக்குறளின் அடிப்படையிலேயே உள்ளது.
சாய்ராம்

Leave a comment