You Are That!- “obedience in service “

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்”.

‘வாலறிவன்’ என்னும் பதத்திற்கு அகமும் புறமும்மாக இருந்து இயங்கும் இறைவனை அறியப்பெற்றவன் என்று பொருள்.பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அகமும் புறமும் என்பதை

க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்: அத்தியாயம்-13

(1) குந்தி புத்திரா, இவ்வுடலம் க்ஷேத்திரம் எனப்ப்டுகிறது. இதை அறிகிறவனை க்ஷேத்ரக்ஞன் என்று ஞானிகள் பகர்கிறார்கள்.

(2) அர்ஜுனா, க்ஷேத்ரங்களனைத்திலும் என்னை க்ஷேத்ரக்ஞன் என்று அறிக..க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன் பற்றிய அறிவே ஞானம் என்பது என் கொள்கை.

(13)அது எங்கும் கைகால்களை உடையது, எங்கும் கண், தலை, வாய்களையுடையது, எங்கும் காதுகளை உடையது, உலகில் அனைத்தையும் அது வியாபித்துள்ளது.

என இவ்வாறாக உபதேசிக்கிறார்.

இத்தகைய க்ஷேத்ரக்ஞன் என்னும் வாலறிவன் மூலம் கற்ற கல்வியின் சிறந்த பயனை ஒருவர் அடைய விரும்பின், வாலறிவனின் நற்றாள் தொழுதல் வேண்டும். நற்றாள் தொழுதல் என்பது வாலறிவனுக்கு பணிவிடை செய்ய அல்லது செய்ய மறுக்க உரிமையற்றவராய்

“பணியில் பணிமின்” என்பதாய் இருத்தலே. அவ்வாறு இன்றி அஹங்ஹாரத்தால்…

“நற்றாள் தொழாஅர் எனின்” அதாவது செய்யும் பணிவிடைக்கு உரிமைகோரின், அவர்கள் கற்ற கல்வி, பயன் தரும் தருணத்தில் பயன் தராது. இதை குறித்தே வள்ளுவர் தம் மற்றொரு குறளில்.

“போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது”

என்னும் எச்சரிக்கையும் விடுக்கிறார்.
சாய்ராம்

Leave a comment