You Are That!- “twice born”

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று”.
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு
தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது என்பது இக்குறளின் பொதுப் பொருளாக உள்ளது.
dvijatva என்பது சமஸ்கிருத சொல்.அதன் பொருள் being twice-born
அதாவது பிறப்பால் ஒரு முறை தோன்றுவது, தோன்றியபின்
மீண்டும் ஒரு தோற்றம் அல்லது பிறப்பு என்னும் இருவகை
பிறப்புக்கள் மனிதகுலத்திற்கு மட்டுமே ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளது.
பைபிள் வாசகம்:In The Bible Jesus replied, “The truth is, no one can enter the Kingdom of God without being born of water and the Spirit”.

புகழ் என்பது மனிதனில் இருந்து தெய்வநிலைக்கு உயர்வதே !

அத்தகைய புகழை அடைய மீண்டும் பிறத்தல் அல்லது
தோன்றியபின் மீண்டும் தோன்றல் என்னும் வள்ளுவரின் வாக்குப்படி தோன்றின், புகழொடு தோன்றலாம்.மேலும் இத்தகைய மறு தோற்றம் கிடைப்பது என்பது மிக மிக அபூர்வம், ஆதலால், புகழொடு சேர்ந்தே இத்தோற்றம் தோன்றுகிறது. ஹிந்து தர்மத்தில் சந்யாசம் பெறுவதை மற்றுமொரு பிறப்பாகத்தான் சொல்லப்படுகிறது. எவ்வாறு ஆதிசங்கர பகவத்பாதாள் முதலையின் பிடியில் இருந்து விடுபட சந்யாசம் பெற்று பின்
புகழொடு தோன்றினாரோ அவ்வாறே !

அஃதிலார்: இத்தகைய இரு பிறப்பாலன் என்னும் தகுதியை பெறாமல் இருப்பதிற்கு மானிடராய் பிறக்காமல், அதாவது தோன்றாமல் இருத்தலே மனிதகுலத்திற்கு நன்மை உடையதாய் இருக்கும் என்னும் பொருள்பட வள்ளுவர் முடிக்கிறார்.
சாய்ராம்

Leave a comment